கெலனியா பிரதேச செயலாளர் கயானி ரணசிங்க மற்றும் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம். அனுரா, ஆயுர்வேத அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சாலிகா, குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் மற்றும் அப்பிரதேச அரச அதிகாரிகள் ஆகியோரின் தலையீட்டுடனும், 262 A மெவெல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் சமூக அபிவிருத்திக் குழுவினால் இப்பகுதியைச் சேர்ந்த ஐம்பது கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று 2026/08/05 புதன்கிழமையன்று மெவெல்லவில் உள்ள குருன்னங்கே வத்த சமூக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு சத்தான உணவுகளைத் தயாரிக்கும் செயல்முறை விளக்கம், ஆயுர்வேத மருத்துவ முகாம், டெங்கு கட்டுப்பாட்டு விழிப்புணர்வு மற்றும் டெங்கு நுளம்புக் கட்டுப்பாட்டிற்கான மருத்துவப் பொடி விநியோகம் ஆகியவை இடம்பெற்றன.
















